நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் உற்சாகமாக அமர்ந்திருக்கும் எழுத்தாளர், ஆசிரியர் பூமலை. மணிவண்ணன் அவர்கள்...
இன்றைய நிகழ்வைத் (29.06.2014) தொகுத்து வழங்கும் நண்பர், ஆசிரியர், எழுத்தாளர் பூமலை. மணிவண்ணன் அவர்கள்...
தூவல் இலக்கிய வட்டத்தின் நிலையான சிறப்பு விருந்தினர், புரவலர் புலவர் அய்யா. மோகன் அவர்கள்...
பார்வையாளர்கள் மற்றும் கவிஞர் ஒகளூர் நிலவன், கவிஞர் சின்தன. பாலுசாமி மற்றும் கவிஞர் வரதராஜ பெருமாள்
இடமிருந்து... கவிஞர் நிலவன், கவிஞர் சின்தன. பாலுசாமி, கவிஞர் வரதராஜ பெருமாள்...
நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக போட்டிக் கவிதை வாசிப்பு... தனது முதல் கவிதையை வாசிப்பவர் கவிஞர் த. காசி வினோதன் அவர்கள்.
மூன்றாம் பரிசைத் தட்டிச் சென்ற கவிஞர் த. காசி வினோதன் அவர்களின் கவிதை...
எழுதுகோல்!
எண்ணங்களை எழுத்துக்களாக மாற்றுபவனே!
எனது கற்பனைகளைக் கதைகளாகவும் –காதல்
கவிதைகளாகவும் உருமாற்றுபவனே!
உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை –உன்
‘உயிர்’ மையைக் கொடுத்து
உயிர் எழுத்துக்களாகச் செதுக்குபவனே!
தேர்வில் மாணவர்களுக்கு
நீ ஒரு நம்பிக்கை…
அலுவலகங்களில்
நீ ஒரு நாயகன்…
கவிஞர்களின் பார்வையில்?
படைப்பவன் இறைவன் தானே!?
எழுத்துக்களைப் படைப்பவன்
எழுதுகோல் என்றால்
கவிஞர்களின் கடவுள்
‘எழுதுகோல்’
த. காசி வினோதன்
எழுதுகோல் என்ற தலைப்பிலான தனது கவிதையை வாசிக்கிறார் கவிஞர் வரதராஜ பெருமாள்...
தனது போட்டிக்கான கவிதையை வாசிக்கிறார் கவிஞர் சிவராமன்...
எழுதுகோல் என்ற தலைப்பிலான தனது போட்டிக் கவிதையை வாசிக்கிறார் கவிஞர் சிந்தனைச் செல்வி.
இரண்டாம் பரிசைத் தட்டிச்சென்ற கவிஞர் சிந்தனைச் செல்வி அவர்களின் கவிதை...
எழுதுகோல்!
விரல்கள் எழுதுகோலானது ஆதிகாலத்தில்…
கற்கள் எழுதுகோலானது கற்காலத்தில்…
எழுத்தாணி எழுதுகோலானது ஓலைச்சுவடிகாலத்தில்…
மயிலிறகு எழுதுகோலானது மன்னரது காலத்தில்…
வண்ண மைகள் எழுதுகோலானது விஞ்ஞான காலத்தில்…
அச்சுக்கள் எழுதுகோலானது இக்காலத்தில்…
இப்படி
அக்காலம் தொட்டு இக்காலம் வரை
உனக்கொரு இடம் தக்க வைத்தாய்!
உன்னால் பலருக்குப்
பல அதிகாரம் கிட்டவைத்தாய்…
உன் முனையைக்
கத்தியை விடவும்
கூர்மையானது என்கிறோம்
இல்லை இல்லை
எழுதுவோனின் எண்ணங்களே
உனக்கு வலிமை சேர்க்கின்றன…
சிலம்புச்செல்வி.
எழுதுகோல் என்ற தலைப்பிலான தனது கவிதையைப் படிக்கிறார் கவிஞர் சின்தன. பாலுசாமி...
எழுதுகோல் என்ற தலைப்பிலான தனது கவிதையை வாசிக்கிறார் கவிஞர் நிலவன்...
நிகழ்ச்சியைச் செம்மையுற வழிநடத்தும் எழுத்தாளர் பூமலை. மணிவண்ணன் அவர்கள்...
தனது கவிதையை வாசிக்கிறார் கவிஞர் குணசீலன்...
தனது கவிதையைப் படிக்கும் கவிஞர் பால்சாமி அவர்கள்...
பார்த்தும் கேட்டும் ரசித்தவண்ணம் உள்ளனர் சிறப்பு விருந்தினர் மற்றும் பார்வையாளர்கள்...
பார்வையாளர்களும் கவிஞர்களும்...
தனது கவிதையை வாசிக்கிறார் கவிஞர் அண்ணாதுரை அவர்கள்...
கவிஞர் சிவராமன் அவர்கள்...
பார்வையாளர்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக